districts

img

ஓசூரில் ரூ.30 கோடியில் புதிய பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி,அக்.24- ஓசூர் மாநகராட்சி, மோரனப்பள்ளி யில் ரூ. 30 கோடியில் அமைய விருக்கும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி களை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநக ராட்சி பகுதியில் ரூ. 3 கோடியே 98 லட்சத்தில் புதிய மீன் மார்க்கெட் கட்டு மானப் பணிகள், காமராஜ் காலனியில் ரூ. 2 கோடி 50 லட்சம் மதிப்பில் புதிய நூலகம், அறிவுசார் மையம். ஓசூர் மாநகராட்சி, பழைய நகராட்சி கட்டிட வளாகத்தில் ரூ. 19 கோடியே 50 லட்சத்தில் புதிய வணிக வளாகம், எம்ஜிஆர் மார்க்கெட்டில் ரூ. 5 கோடி 88 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டு மான பணிகள் ஆகிய வற்றை நகர்ப்புற நிர்வாகத் துறை துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.  நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்லக்குமார், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய பேருந்து நிலை யத்தில் 62 பேருந்து நிறுத்தப் பகுதிகளும், 89 கடை களும், தாய்மார்கள் பாலூட்டும் அறை 1, ஏடிஎம் வசதிகள், புறக்காவல் நிலையமும், கண்காணிப்பு கேமராக்கள், பொதுமக்கள் காத்திருப்பு பகுதி, மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி, ஹோட்டல்கள், நேரம் காப்பாளர் அறை, குடிநீர் வசதி, தீயணைக்கும் கருவி கள், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி ஆணை யர் சினேகா,  மாநகராட்சி துணை மேயர் ஆனந்த ய்யா, மண்டலக் குழுத் தலைவர் ரவி, நிலைக் குழுத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.