காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் பொன்னேரி கரை அருகே அமைகிறது
காஞ்சிபுரம், ஜன.24- காஞ்சிபுரம் ஏராளமான கோயில் களை உள்ளடக்கிய நகரமாக உள்ளது. இங்குள்ள பட்டுச்சேலைகள் உலக பிரசித்தி பெற்றவை. கோயில்கள் நிறைந்த காஞ்சி புரத்திற்கு தினந்தோறும் தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா வின் நினைவு இல்லமும் இங்கு உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சி புரத்தில் போதிய வசதிகளுடன் பேருந்து நிலையம் என்ற குறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக நிலவி வரு கிறது. தற்போது காஞ்சிபுரத்தின் மைய ப்பகுதியான காமராஜ் சாலையில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள பேருந்து நிலையம், சுமார் 50 ஆண்டு களுக்கு முன்பு அப்போது இருந்த போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை யின் அடிப்படையில் கட்டப்பட்டது. தற்போது தினமும் 350 பேருந்துகள் இங்கிருந்து திருப்பதி, சித்தூர், பெங்க ளூர்,சென்னை, செங்கல்பட்டு, திரு வள்ளூர், திருவண்ணாமலை, விழுப்பு ரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு இயக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள திருபெரும்புதூர், ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகள் தொழிற்சாலைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளன. மேலும் மக்கள்தொகை பெருக்கமும் அதி கரித்து உள்ளது. தற்போது காஞ்சி புரம் மாநராட்சியாக தரம் உயர்த்தப் பட்ட நிலையில் பேருந்து நிலையம் மட்டும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளும் நகரத்தின் மையபகுதிக்கு வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து காஞ்சிபுரத்தில் நவீன வசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்த னர். இந்த நிலையில் தற்போது காஞ்சி புரம் பொன்னேரி கரை அருகே சுமார் 19 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. அந்த இடத்தில் நவீன வசதி யுடன் புதிய பேருந்து நிலையம் அமை ப்பதற்கு ரூ. 38 கோடி நிதி ஒதுக் கீடும் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து பணிமனையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் நகர மக்களின் 25 ஆண்டு கனவு விரைவில் நிறைவேற உள்ளது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டம், திரு பெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலு வலர் கா.சு.கந்தசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு நிரந்தர மாற்றுப்பணி வழங்க வேண்டும் எம்டிசி மேலாண்மை இயக்குநரிடம் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஜன. 24 - மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு நிரந்தர மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீ சிடம் வெள்ளியன்று (ஜன.24) சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, நிர்வாகி குமார், மாநகர போக்குவரத்து கழக கிளை நிர்வாகி கள் ராமமூர்த்தி, முகமது காசிம், பார்த்தி பன், வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் உள்ளிட் டோர் மனு அளித்து பேசினர். அப்போது, தொழிலாளி மாற்றுத்திற னாளி அடையாள சான்றிதழ் பெற்று சம ர்ப்பித்தால் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016-ன்படி அவருக்கு பணியை மறுக்க கூடாது. ஊனத்தின் தன்மைக்கேற்ப தற்காலி கமாக அல்லாமல் நிரந்தர மாற்றுப்பணி வழங்க வேண்டும். மேலும், அவரது இருப்பிடத்திற்கு அருகில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவரை மீண்டும் மீண்டும் மருத்துவ குழு மத்திற்கு (மெடிக்கல் போர்ட்) அனுப்பக் கூடாது. கழக தலைமை அலுவலகத்தில் குறைத்தீர்க்கும் தனி அலுவலரை நியமிக்க வேண்டும். மாதம் ஒருமுறை குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும். போக்குவரத்து பயணப்படி கோரினால் கால தாமதமின்றி வழங்க வேண்டும். மருத்துவ குழுமம் மாற்றுத்திறனாளி என பரிந்துரைத்த பிறகும், ஒட்டுநர், நடத்துநர் உரிமத்தை புதுப்பிக்க வற்புறுத்தக் கூடாது. மேலும் ஊழியர்கள் தலைமை அலுவல கத்தில் சாய்தள பாதை, மாற்றுத்திறனாளி களுக்கான பிரத்தெயக கழிப்பறை, மாடி களுக்கு வந்துசெல்ல ஏதுவாக மின்தூக்கி வசதி ஏற்படுத்த வேண்டும். அலுவலகங் களில் தடையற்ற சூழலை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு மாறாக, நிர்வாகம் செயல்படுவது சட்ட விரோதம் என்று குறிப் பிட்டனர். இதற்கு பதிலளித்த மேலாண் இயக்கு நர், மின்தூக்கி, கழிப்பிடம் உள்ளிட்ட வசதி களை உடனடியாக ஏற்படுத்தப்படும். கோரி க்கைகளை முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்தாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மண் சரிவில் உருண்டு வந்த பாறைகளை அகற்றும் பணிதீவிரம்
திருவண்ணாமலை, ஜன.24- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறம் அமைந்துள்ள காப்புக்காடு பகுதியில் கடந்த டிசம்பரில் பெஞ்சால் புயலால் ஏற்பட்ட மண்சரி வில் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். அப்போது, மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 50 டன் பாறையை அகற்றும் பணியில் திருச்சியில் இருந்து பாறை களை அகற்றும் சிறப்பு குழுவினர் கடந்த இரண்டு தினங் களாக ஈடுபட்டுள்ளனர். பாறைகளுக்கு இடையே சுமார் 5 அடி ஆழத்திற்கு பவர் டில்லர் இயந்திரத்தை பயன்படுத்தி சுமார் 210 துளைகள் இடப்பட்டு அந்த துளைகளில் பாறை களை உடைப்பதற்கு பயன்படுத்தும் ராக் கிராக் என்று சொல்ல க்கூடிய அமிலத்தை பயன்படுத்தி உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, ராக் கிராக் அமில பவுடர் சுமார் 65 கிலோ திரவமாக கலந்து பாறைகளில் இடப்பட்ட துளையில் ஊற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமிலம் சூரிய ஒளி யின் வெப்பம் அதிகமாக அதிகமாக பாறைகளில் விரி சல் ஏற்படும். பின்னர் அதை தொழிலாளர்கள் அகற்று வார்கள் என தெரிவித்துள்ளார். பாறைகளை ராக் கிராக் என்று சொல்லக்கூடிய இரும்பு தகடுகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட, சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை, ஜன.24 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சனிக்கிழமை (ஜன. 25) அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம், முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், தொலைபேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநி யோக திட்டம் தொடர்பான குறைகளை தெரிவிக்க பொது மக்கள் மனு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திர கலா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.