விழுப்புரம், நவ.2- திண்டிவனம் வட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் கலந்து கொண்டு சங்க நடவடிக்கை கள் குறித்து பேசினார். சேந்தமங்கலம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்,அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டி டம் கட்டித் தர வேண்டும். பழுதான நிலையில் உள்ள குடிநீர் மினி தொட்டியை சரி செய்து தர வேண்டும். சேந்தமங்கலம் கிரா மத்தில் கருமாதி கொட்டகை அமைத்து தர வேண்டும்.சேந்தமங்கலம் கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.கண்ணதாசன், வட்டச் செயலாளர் ஏ.ம.சத்தீஷ் குமார், வட்டப் பொரு ளாளர் இர.பாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ரவிச்சந்திரன், கே. சிவக்குமார், கிளை நிர்வாகிகள் சந்திரசேகர், தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.