districts

img

வலையில் சிக்கிய  மர்ம பொருள்

விழுப்புரம், பிப். 20- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (38). இவர் வழக்கம் போல் சக மீனவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை விசைப்படகில் கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்துக் கொண்டு கரை திரும்பினார். அப்போது அவரது வலையில் ஒரு மர்ம பொருள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் வனத்துறை காவல்துறை, கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று 10 கிலோ எடையுள்ள அந்த மர்ம பொருளை ஆய்வு செய்தனர். அப்போது அது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருக்கக்கூடும் என்றும், முறையாக ஆய்வகத்தில் சோதனை செய்தால் மட்டுமே அது என்னவென்று தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருந்தால் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.