மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி தமிழ்நாடு முழுவதும் கல்லூரி முதல்வர்களிடம் மனு அளிக்கும் இயக்கத்தை செவ்வாயன்று (அக்.22) இந்திய மாணவர் சங்கம் நடத்தியது. இதன் ஒருபகுதியாக சென்னை நந்தனம் கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரனிடம், சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்,ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் சதீஷ், தலைவர் அகிலன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.