காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்விமோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலைப்போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவருமான தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.