கள்ளக்குறிச்சி, பிப்.3 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் ஊராட்சியில் பராமரிக்கப்படாமல் உள்ள சமுதாயக் கூடத்தை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டியுள்ள கழிப்பறைகளை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். இடிந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு புதி தாக கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சவப்பாடை, தீச்சட்டி ஏந்தி சடங்கு செய்யும் போராட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் கே. குப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, தலைவர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். துணைச் செயலாளர் உத்திரக்கோட்டி, வெண்ணிலா, இளையராஜா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தனர்.