பூந்தமல்லி, ஜூன் 14
பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் மூலம் வடிவமைத்த காற்றாலை சாதனங்கள் செவ்வாயன்று இரவு கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சாலை யோர பள்ளத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்தது. அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது லாரி கவிழ்ந்த தால் காற்றாலை இறக்கை களில் சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.