சென்னை, செப். 9- பழங்கால கட்டிடங்கள், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கும் கட்டிடங்களை அகற்ற நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இயந் திரங்களை வால்வோ நிறுவனம் வடிவமைத் துள்ளது. நின்ற இடத்தி லிருந்து 10 அடக்குமாடி கட்டிடத்தை எந்த பாதிப்பும் இன்றி லாவகமாக இடிக்கும் திறன் பெற்றது இந்த வால்வோ. தென்னிந்தியா வின் மிகப்பெரிய இடிப்பு இயந்திரமாக பரிணமித்து வருகிறது. இது குறி்த்து வால்வோ இந்திய நிர்வாக இயக்குநர் டிமிட்ரோவ் கிருஷ்ணன், இந்திய கட்டிடங்கள் அகற் றும் சங்கத்தின் நிறுவன தலைவர் மோகன், பி.கே.யுனிக் பிராஜக்ட் நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆகியோர் கூறுகையில், கட்டிடங்கள் அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி சவாலான சூழல்களில் ஒப்பிடமுடியாத ஆற்றல், துல்லியம் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. வால்வோ நிறுவனம், இதே துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள பிகே யுனிக் புராஜெக்ட்ஸுடன் தொழில் முறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது, பாதுகாப்பு மற்றும் சிறப்பிற்கு முன் னுரிமை அளிப்பதன் மூலம் ஒன்றாக இணைந்து தொழில்துறையை மாற்ற முடியும், கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக கட்டிடங் களை அகற்றும் பணியில் வால்வோ இயந்திரங்கள், குறிப்பாக EC750DUHR, பாது காப்பு, செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழலில் பாதுகாப் பான கட்டிட அகற்றில் தொழில்நுட்பத்தை கருத் தில் கொள்ளும்போது, தூசி அடக்குதல் மற்றும் உயர்த் தப்பட்ட கேபின்கள் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் இந்நிறுவனம் முன்னணி யில் உள்ளது என்றனர்.