கடலூர், டிச.30- மீன் பிடிக்கும் பொழுது கடலில் விழுந்து ஞகாணாமல் போன மீனவரை கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து கடலூர் ஆட்சியருக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:- கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் உள்ள புதுக்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த அமுது, சக்திவேல், ெஜயவேல் ஆகியோர் டிச. 29 அன்று மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றுள்ளார். பெருத்த அலையில் சிக்கிய அமுது மற்றும் சக்திவேல் இருவரும் தப்பி பிழைத்து சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்க ளுடன் சென்ற ஜெயசீலன் என்ற மீனவர் நிலை என்னவென்று இதுவரை தெரிய வில்லை. விபத்து நடந்து 48 மணி நேரம் கடந்த பின்னும் கடலோர காவல்படை, இதர அரசு நிறுவனங்கள் இதுவரை தேடுதல் பணியில் ஈடுபடவில்லை என்பது மிகுந்த கவலைய ளிக்கிறது. எனவே காணாமல் போன மீனவர் ெஜய சீலனை கண்டுபிடிக்க போர்கால அடிப்படை யில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தொழிலாளர் சங்கம் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பி.ஏழுமலை,பி.பாலு, சுந்தரமூர்த்தி, ஜே. ராஜேஷ் கண்ணன், ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஸ்டாலின், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. பழனி வேல் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஆகியோ ருக்கு மனு கொடுத்தனர். உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.