districts

img

பட்டா கோரி காத்திருப்பு போராட்டம் நேரில் ஆய்வு செய்வதாக அதிகாரி வாக்குறுதி

திருவள்ளூர், ஜன.24- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் வசித்துவரும்  40க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பங்களுக்கு பட்டா வழங்கக்கோரி  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.   தற்போது இந்த குடும்பத்தினர் சித்தராஜ கண்டிகை, பில்லா குப்பத்தில் வாடகை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் செவ்வாயன்று (ஜன 24) கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் ஜஸ்வர்யா பேச்சு நடத்தினார். அப்போது வரும் வெள்ளியன்று (ஜன 27) அந்த கிராமத்திற்கே நேரடியாக சென்று ஆய்வு செய்து பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைச் செய லாளர் பி.டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்   மாவட்ட நிர்வாகிகள் த.கன்னியப்பன், எம்.சிவக்குமார், ராணி, விவசாய சங்க மாநில துணைத்தலைவர் பி.துளசிநாராயணன்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஜி.சூரியபிரகாஷ்,  விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தவமணி,  அ.து.கோதண்டன், வாலிபர் சங்க நிர்வாகிகள் எஸ்.கலையரசன், டி.மதன்,ப.லோகநாதன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.