districts

img

வண்ணாரப்பேட்டையில் மரச்சாமான் கடையில் தீ விபத்து

சென்னை, ஏப். 25- சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் சபிபுல்லா (40). இவர் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பீரோ, மரக்கட்டில் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார்.  இந்த கம்பெனியில் 4 பேர் வேலை செய்கிறார்கள். புதன்கிழமை இரவு வழக்கம்போல் விற்பனை முடிந்ததும் கம்பெனியை மூடி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வியாழனன்று காலை கம்பெனியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. பின்னர் தீ பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி செந்தில்குமார் தலைமையில்  வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை போராடி அணைத்த னர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  தீக்கிரையானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது  வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.