கள்ளக்குறிச்சி, ஜன.13- உழைக்கும் மக்களின் உற்றத் தோழனாக விளங்கி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புறங்களில் ஏழை-எளிய மக்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களை சந்தித்து ஆண்டு தோறும் கட்சியின் வளர்ச்சி நிதி வசூலித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநாவலூர் மேற்கு ஒன்றியத்தில் களமருதூர், இருந்தை, வேலூர்,பிள்ளையார் குப்பம், பா. கில்லனூர், டி.ஒரத்தூர், நெமிலி, உ.செல்லூர் ஆகிய கிராமங்களில் ஒன்றியச் செயலாளர் கே.ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து குழுக்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் உண்டியல் மூலம் நிதி வசூல் செய்தனர். அப்போது, களமருதூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இந்த இயக்கத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். செந்தில், மாவட்டக் குழு உறுப்பினர் டி.எஸ்.மோகன், ஏ.வீராசாமி, கே.அய்யனார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வீரன், சுரேஷ், சிவக்குமார், சக்கரவர்த், தி. விசாலாட்சி, மணிமேகலை ஆகியோர் பங்கேற்றனர்.