districts

மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

சென்னை,மே 20-  

    மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான சுகுமுகமது (22)  கடந்த ஓராண்டாக சென்னை சூளை நெடுஞ்சாலையில் அடுக்குமாடி குடி யிருப்பில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று சுகு முகமது 2-வது மாடியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.