கடலூர், டிச.2- தென்பெண்ணை ஆற்றின் கரையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரமாக கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயலால் கடலூர் மாவட்டம் முழுவதும் 30 ஆம் தேதி காலை முதல் 1 தேதி மாலை வரை தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் பல்லா யிரக்கணக்கான குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாத நிலை உள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நெல், மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர் டிசம்பர் 2 ஆம் தேதி அதி காலை சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றிய தண்ணீர், பெண்ணையாற்றில் விடப்பட்டது. பெண்ணையாறு தண்ணீர் பகண்டை, கடலூர் மாந கரம், கங்கனாங்குப்பம், வெளி செம்மண்டலம், தாழங்குடா என 20 க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் 50 மேற்பட்ட நகர்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடி யிருப்புகளில் உள்ள தண்ணீர் புகுந்தது. டிவி, வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்சி, உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது. வீட்டில் இருந்து பல்வேறு ஆவ ணங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பல கோடி ரூபாய் பொருட்கள் சேத மடைந்துள்ளது. மிதக்கும் நகரம் கெடிலம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. கோமுகி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மணிமுத்தா றில் கரைபுரண்டு ஓடுகிறது. கட லூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளத்தால் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாநகரம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு குடியிருப்பு பகுதிகளுக்கு போர்கால அடிப்படையில் மின் பழுதுகளை சரி செய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்பு கொடுக்க முடியாத இடங்களுக்கு வாகனங்கள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கெடிலம், பெண்ணையாற்று கரைகளை பலப்படுத்த வேண்டும் என தொடர்ந்து சிபிஎம் வலி யுறுத்தி வருகிறோம். இந்த நிலை யில், கடந்த மாதம் 19 ஆம் தேதி சாத்தனூர் திறக்கப்பட்ட தண்ணீரால் வெளி செம்மண்டலம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்ணையாற்று கரைகளை பலப்படுத்த கான்கிரீட் வால் இதுவரை அமைக்கப்படவில்லை. நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை பெண்ணையாற்றின் கரை யில் கான்கிரீட் வால் அமைக்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு, உயிரிழந்த கால்நடைகளுக்கு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் வெள்ள நிவாரண பணிகள் முறை யாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளி யேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் தொடர்ந்து, இயற்கை பேரழிவினால் பாதிக்க கூடிய மாவட்டமாக 8 மாவட்டங்களில் மழை வெள்ள வடிகால் பகுதியாக உள்ளது. எனவே இயற்கை பேரழிவு பாதித்த மாவட்டமாக அறி விப்பு செய்ய வேண்டும். தற்காலிக ஏற்பாடுகள் செய்து விட்டு இயற்கை பேரழிவுகளில் இருந்து கடலூர் மாவட்ட மக்களை பாதுகாக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.