வேலூர், நவ.9 – சிபிஎம் சட்டமன்ற உறுப் பினர் தொகுதிமேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமு தாயக்கூடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாததற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி 28 வது வார்டு சந்தப்பேட்டை பகுதியில் கடந்த 2006-2011ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பகத்சிங் சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டது. கட்டி முடித்து பல ஆண்டு களாகியும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இது குறித்து சிபிஎம் சார்பில் மாவட்ட நிர்வாகம், நக ராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தற்போது அக்கட்டிடம் நகராட்சி குப்பை சேகரிக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது. அதன் அருகே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்ததால் தற்காலிக அங்கன்வாடி மையத்தை இடமாற்றம் செய்துள்ளனர். ஏற்கெனவே அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதே கட்டிடத்தில் உட்பகுதியில் கடும் துர்நாற்றத்திற்கு இடையே சுமார் 25 குழந்தைகளை கொண்ட அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. மேலும் அங்கன்வாடி குழந்தைகள் அமரும் இடத்திற்கு வெகு அருகில் அங்கு செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதி யான மாத்திரை, மருந்து கள் மூட்டை மூட்டை யாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. ஒருபுறம் குப்பை கழிவு களின் துர்நாற்றம் மறுபுறம் காலாவதியான மாத்திரை மருந்துகளின் இடையில் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் குடி யாத்தம் சிபிஎம் நகர செயலாளர் வே. குபேந்திரன், நகர குழு உறுப்பினர் முருகா னந்தம் ஆகியோர் நக ராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசனை சந்தித்து முறையிட்டனர். இதனையடுத்து உடனடி யாக அங்கிருந்து குப்பை களை அகற்ற உத்தர விட்டார். மேலும் அங்கு செயல்படும் அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். மேலும் கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் சமுதாய கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து நகராட்சி தூய்மை பணி யாளர்கள் அங்கிருந்து குப்பைகளை அகற்றினர்.