districts

img

ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் கெலமங்கலம் ஒன்றிய மாநாடு கோரிக்கை

கிருஷ்ணகிரி, அக்.29- ஆற்றை கடந்து செல்லும்  போது ஆபத்தை எதிர்கொள் ளும் தலித் மக்களுக்கு மணியம் பாடியில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி யின் கெலமங்கலம் ஒன்றிய மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.  சிபிஎம் கெலமங்கலம் ஒன்றிய 12 வது மாநாடு தாமரைச்செல்வி, துர்வாசன் ஆகியோர் தலைமையில் தேன்கனிக் கோட்டையில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் கிருஷ்ணப்பா கொடியேற்றினார்.முனியப்பன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். உத்திரகுமார் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எக்ஸ். இருதயராஜ் துவக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் டி.ராஜா வேலை மற்றும் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.ஜெயராமன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜி.சேகர் நிறைவுரையாற்றினார். ஒன்றியக்குழு தேர்வு 11 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு டி.ராஜா செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் கெலமங்கலம் அருகே உள்ள மணியம்பாடியில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் சுடுகாட்டிற்கு தனியாக இடம் இல்லை. இதனால், ஆற்றை கடந்து செல்ல வேண்டி யுள்ளது. மேலும்,விவசாய நிலங்களுக்கும் பணிகளுக்கும் செல்ல வேண்டும் என்றாலும் ஆற்றுக்குள் 4 அடி ஆழ தண்ணீருக்குள் இறங்கி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றை கடந்து செல்லும் போது பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே, மணியம்பாடி ஆற்றில் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும், பட்டியலின மக்களுக்கு சுடுகாடு இடம் ஒதுக்கித் தர வேண்டும், நீண்ட காலமாக வீடு இல்லாமல் வசிக்கும் பட்டியலின குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.