புதுச்சேரி, ஏப் 20- புதுச்சேரியில் வெள்ளியன்று (ஏப்.19) நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட வி.மணவெளி பகுதியில், தனியார் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்தார். அவருக்கு உதவிசெய்வதாக கூறி பா.ஜ.க.வினர் உள்ளே அழைத்துச்சென்றனர். அங்குள்ள வாக்குச்சாவடி பணி யாளர்களிடம் முதியவருக்கு பார்வை தெரியவில்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து முதிய வரின் ஆவணங்கள் சரிபார்க் கப்பட்டது, பின் முதியவரிடம் கையெழுத்தை பெற்றக்கொண்ட பணியாளர்கள் உதவிக்கு வந்த நபருடன் முதியவரை திரை மறைவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த முதியவருடன் சென்ற பாஜக பிரமுகர் முதிய வரிடம் எதுவும் கேட்காமலேயே தாமரை சின்னத்திற்கு வாக்குப் பதிவு செய்தார். பின்னர் அந்த முதியவரை அழைத்து சென்று வெளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த முதியவர் தன்னை ஏமாற்றி அவர்களே ஓட்டு போட்டுவிட்டதாக புலம்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.