ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தேவான்ஷ் நாரா. இவர் செஸ் விளையாட்டின் “சூப்பர் பாஸ்ட் செக்மேட்” பிரிவில் 175 செக்மேட் புதிர் களுக்கு அதிவிரைவாக தீர்வு கண்டு உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை லண்டனின் மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தால் (WORLD BOOK RECORDS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு பேரன் ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷின் மகன் தான் தேவான்ஷ் நாரா. அதாவது சந்திரபாபுவின் பேரனான தேவான்ஷ் நாரா “சூப்பர் பாஸ்ட் செக்மேட்” பிரிவில் உலக சாதனையுடன் வரலாறு படைத்துள்ளார். பிரபல செஸ் பயிற்சியாளர் கே.ராஜசேகர் வழிகாட்டுதல் மூலமாக தான் தேவான்ஷ் நாரா இந்த உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.