சென்னை, செப். 15- பல் அறுவை சிகிச்சை மூலம் 49 வயது பெண் புதிய வாழக் கையை பெற்றுள்ளார். முகஎலும்புகளில் கரோ னாய்டு செயல் முறையின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்பட்ட “கரோனாய்டு இம்பிபி மென்ட் சிண்ட்ரோம்” என்ற அரிய பிரச்சனையால் கடந்த 47 ஆண்டுகளாக வாயைத்திறக் கவோ, பேசவோ, மெல்லவோ முடியாமல் இந்த பெண் அவதிப் பட்டார். கடந்த 47 ஆண்டு களாக திரவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரது உடல் எடை 18 கிலோ வாக இருந்தது. பூந்தமல்லி அருகே உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் அவரை பரிசோதித்த மருத்து வர்கள் உரிய சிகிச்சை அளித்த தால் அவர் குணமடைந்து முகமும் சீராகி புது வாழ்வு பெற்றுள்ளார்.