districts

img

பொத்தேரியில் 24 மணி நேர ரயில் பெட்டி உணவகம்

சென்னை,ஜன.29- சென்னை பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் ரயில் பெட்டி உணவகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் இன்னும் 10 நாட்களில் திறக்கப்பட உள்ளது. இந்த உணவகம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும்  இயங்கும். ஜி.எஸ்.டி. சாலையின் ஓரத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த ரயில் பெட்டி உணவகம் , பொத்தேரியில் வசிப்பவர்களையும், ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் பயணிகளையும் வெகுவாக கவரும். இந்த உணவகத்தின் பெயர் ‘என்.எச் 32’ ஆகும். ரூ.1.5 கோடி மதிப்பில் இந்த உணவகத்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரயில்வே அமைத்துள்ளது.  2,000 சதுர அடி பரப்பளவில் இந்த உணவகம் அமைக்கப் பட்டுள்ளது. இதுதெற்கு ரயில்வேயால் அமைக்கப்பட்டுள்ள 2-வது ரயில் பெட்டி உணவகம் ஆகும். இந்த உணவகத்தில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து சமையல்  கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காட்டாங்கொளத் தூரில் மேலும் ஒரு ரயில் உணவகம் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.