districts

img

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு கெங்கதேவன் குப்பத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு  மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரி அரசு நிர்வாகத்திடம்  பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று  நடும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.