districts

img

புத்தகத் திருவிழாவில் ஓவியப் போட்டி பள்ளி மாணவர்கள் 950 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை, ஆக.5 - புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  இணைந்து நடத்தும் 7 ஆவது புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதி யாக, 950 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. மன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கிய இந்த ஓவியப் போட்டியில் 1,2 ஆம் வகுப்புகளில் இருந்து 300 மாணவர்களும், 3,4,5  ஆம் வகுப்புகளில் இருந்து 350  மாணவர்களும், 6, 7, 8 ஆம் வகுப்பு களில் இருந்து 170 மாணவர்களும், 9, 10 வகுப்புகளில் இருந்து 95  மாணவர்களும், 11, 12 ஆம் வகுப்புகளில் இருந்து 85 மாணவர் களும் என மொத்தம் 950 மாண வர்கள் கலந்து கொண்டனர்.  ஒவ்வொரு பிரிவிலும் ஏழு ஆறு தல் பரிசுகளும், முதல் மூன்று  இடங்களைப் பெற்ற மாணவர் களுக்கு பரிசுகளும் சான்றிதழ் களும், புத்தகங்களும் வழங்கப் பட்டன. ஓவியப் போட்டியை ஓவிய  ஆசிரியர் எம்.தனபால கிரு ஷ்ணன், ஓவியர் சித்திரகலா கே. ரவி உள்ளிட்டோர் ஒருங்கிணைத் தனர். ஒவ்வொரு பிரிவு வாரியாக முறையே முதல் மூன்று இடங் களைப் பிடித்தவர்கள் முதல் பிரிவு- லிட்டில் ஏஞ்சல்  பள்ளி மாணவி எஸ்.வி.சாய்  சாஸ்தி, சாய் லாரல் இன்டர்நேஷ னல் பள்ளி மாணவி கீர்த்தனா, புதுகை ஜஸ்வந்த். 2 ஆம் பிரிவு-  சந்தைப்பேட்டை நகராட்சி நடு நிலைப்பள்ளி மாணவி தேசிகா, சாய் லாரல் இன்டர்நேஷனல் பள்ளி  மாணவர் மிதுன் ரித்திகா, கறம்பக் குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவி மகிஷா. 3 ஆம் பிரிவு- அரசு ராணியார் மக ளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரிணிகா, வைரம் மெட்ரிக் பள்ளி மாணவன் எம்.வெற்றிச்செல்வன், வைரஸ் மெட்ரிக் பள்ளி மாணவி  எம்.யாழினி. 4 ஆம் பிரிவு -  திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அனுஷா, அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி நாக லட்சுமி, காவிரி நகர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவி ஹரிணி. 5 ஆம் பிரிவு- கீரனூர் அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி விக்னேஷ்வரி, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி  சண்முகப்பிரியா, பொன் புதுப் பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சவுந்தர்யா. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை)  வி. முருகையன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.

பாடத் திட்டத்தையும் தாண்டி மாணவர்கள் வாசிக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஆக.5 - மாணவர்கள் தங்களுக்கான பாடத் திட்டத்தையும் தாண்டி வாசிக்க வேண்டும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சொ.சுப்பையா. புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வின் 8 ஆம் நாளான சனிக்கிழமை மாலை, ‘புத்தகங்கள் கட்டமைக்கும் பண்பாடு’என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:  அமெரிக்காவில்தான் மாண வர் துப்பாக்கியை எடுத்து பார்ப்போ ரையெல்லாம் சுட்டுத் தள்ளுவார். ஆனால், தமிழ் மண்ணில் இப் போது ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் காட்சிகள் பரபரப்பாக வெளிவருகின்றன. நம்முடைய பள்ளிப் பாடப் புத்த கங்கள் முன்பைவிட திறனுள்ள பாடப் புத்தகங்கள்தான். ஆசிரியர் களும் பாடங்களை நன்றாகத் தான் கற்பிக்கிறார்கள். மதிப்பெண் களையும் மாணவர்கள் குறை வில்லாமல்தான் பெறுகிறார்கள். ஆனால் வாழ்க்கையைத்தான் சரி யாக வாழத் தெரியவில்லை. பாடப் புத்தகத்தைத் தாண்டி மாணவர்கள் வாசிக்க வேண்டும்.  சக மனிதனை எப்படி நேசிப்பது, வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தர வேண் டும். ஆசிரியர்களும் நிறைய நூல் களை வாசித்திருக்கும் போதுதான் பாடப்புத்தகத்தையும் தாண்டி உலகை சொல்லித் தர முடியும். இவ்வாறு அவர் பேசினார். ‘போர்முனை முதல் தெரு முனை வரை’ என்ற தலைப்பில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு விஜயகுமார் பேசினார். நிகழ்ச்சிக்கு புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் ரகுராமன் தலைமை வகித்தார். ஆர்.ராஜ்குமார் வரவேற்க, வி.சண்முகபிரியா நன்றி கூறினார்.