சென்னை, மார்ச் 15- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 949 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுநீரகத்தின் முக்கியத் துவம் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மார்ச் 14 அன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொரு ளான “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம் உயர்ந்த, உகந்த, சமமான மருத்துவ அணுகல்” என்பது குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் நடைபெற்றது. ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தார். ஸ்டான்லி மருத்துவ மனையில் முதன் முதலாக சிறுநீரகத் துறையைத் தொடங்கி, அந்த பிரிவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் டாக்டர் முத்து ஜெயராம் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசினார். அப்போது சிறுநீரக நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீரிழிவு, உயர் ரத்த அழுத் தம், உடல் பருமன் போன் றவை சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணம் என்றும், உடல்நலனை மேம்படுத்து வது குறித்தும் எடுத்துரைத் தார். மருத்துவமனை முதல் வர் பி.பாலாஜி கூறுகை யில், ஸ்டான்லி மருத்துவ மனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 1996ஆம் ஆண்டு நடை பெற்றது. இதுவரை சிறு நீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் 949 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட் டுள்ளது. இதில் 794 நோயாளிகள் தங்களது உறவினர்களிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை தானமாக பெற்றுள்ளனர். இங்கு தற்போது 30 டயாலிசிஸ் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஹிமோட யாலிசிஸ் செய்யப்படு கிறது. புறநோயாளிகளாக தினசரி 200க்கும் மேற்பட் டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர் என்றார். மேலும் உலக குளுக் கோமா (கண் நீர் அழுத்த நோய்) விழிப்புணர்வு வாரம் மார்ச் 10 முதல் 16 வரை கடைபிடிக்கப்படுவதை ஒட்டி கண் நீர் அழுத்த நோயின் முன்னாய்வு பரிசோதனையை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தார். குளுக்கோமா வாரத்தை வெளிப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்குதல், தொடர் மருத்துவ கருத்த ரங்கம், மருத்துவ மற்றும் செவிலியர் மாணவர்க ளுக்கு பல்வேறு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கிளாக் கோமா பரிசோதனை செய் யப்படுகிறது. மக்களவை உறுப்பினர் பரிந்துரையின் பேரில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிதி உதவி மூலம் இதுவரை சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான உயிர் காக்கும் சிகிச்சைக்கு தேவைப்படும் உப கரணங்கள் வழங்கப் பட்டுள்ளன என்றும் அவர் கூறினார் நிகழ்ச்சியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 15 ஆண்டு களுக்கு மேல் நலமுடன் உள்ளவர்களுக்கு மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் துணை முதல்வர் ஜெனத் சுகந்தா, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ், சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் எட்வின் பெர்ணாண்டோ, உறைவிட மருத்துவ அதி காரி வனிதா மலர், சிறுநீர கவியல் சிறப்பு மருத்து வர்கள் எஸ்.திருமாவளவன், வி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.