districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.879. 46 கோடி கூட்டுறவு கடன் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கள்ளக்குறிச்சி, நவ.15 – கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை யில் நடைபெற்ற  விழாவில்  பொதுப்பணித்  துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கூட்டுறவுத் துறையின் சார்பில் நடப்பாண்டில் 1,11,753 பயனாளிகளுக்கு ரூ.879. 46 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மக்களவை உறுப்பினர் மலையரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன்,விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி, கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்ராயலு, கூட்டுறவுத் துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள்,அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.