சென்னையில் வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு
சென்னை, ஆக. 1- சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக் கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் தவணையாக ரூ.150 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் மாநில அரசுக்கு முதல் தவணையாக இந்த மானியம் வழங்கப்படும். சிறு நீர்நிலை களுடன் இணைக்கப்பட்டுள்ள சில உபரி வாய்க்கால்களை மேம்படுத்துதல், புதிய மழைநீர் வடிகால்களை நிர்மாணித்தல், கடற் பாசி பூங்காக்கள் மேம்பாடு, எட்டு நீர்நிலை களை புத்துயிர் பெறுதல் உள்ளிட்ட 5 திட்டங் களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து நீர் வளத்துறை அதிகாரி கள் கூறியதாவது, திரு.வி.க.நகர், கொளத்தூர், கெருகம் பாக்கம் வாய்க்காலில் வெள்ளத்தை குறைக்கும் வகையில் தணிகாசலம் வடிகால் கொள்ளளவு மேம்படுத்தப்படுகி றது. மணப்பாக்கம், நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கை குறைக்கும் பணி நடந்து வருகிறது. கொரட்டூர் உபரி வாய்க்காலின் திறனை அதிகரிக்கவும், புத்தகரம் உள்ளிட்ட சிறு நீர்நிலைகளை புதுப்பிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. மணலி, சாத்தங்காடு, மாதவரம் போன்ற பகுதிகளில் உள்ள 8 நீர்நிலைகளும் வெள்ளத் தைத் தணிக்க புதுப்பிக்கப்படும் என்றனர்.
போலி மருத்துவர்கள் கைது
சென்னை, ஆக. 1- வளசரவாக்கத்தில் தனியார் மருத்துவமனை யில் 2 போலி மருத்துவர் கள் இருப்பதாக வந்த புகாரின் பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை யில் மருத்துவத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனியார் மருத்துவமனை உரிமை யாளர் சரவணனிடம் விசா ரணை மேற்கொண்ட போது அகஸ்டின், பரதன் ஆகிய இருவர் போலி சான்றிதழ் மூலம் மருத்துவம் பார்த்து வந்ததும், அவர்களது மருத்துவ சான்றிதழ்களை சோதனை செய்த போது போலி மருத்துவ சான்றிதழ் கள் என்பதும் தெரியவந் துள்ளது. இது குறித்து வள சரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படை யில் வந்த வளசரவாக்கம் போலீசார் அகஸ்டின் மற்றும் பரதன்ஆகிய இருவரிடமும்மே ற்கொண்ட விசாரணை யில், அகஸ்டின் கடந்த 2003ஆம் ஆண்டு ரஷ்யா வில் மருத்துவம் பயின்றதாக வும், ஆனால் தொடர்ந்து இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்ததும், போலி சான்று மூலம் சிகிச்சை அளித்து வந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனை யில் 2 ஆண்டுகளாக பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். மற்றொருவரான பரதன் என்பவர் 2014ஆம் ஆண்டு வரை சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவ ஆணையத்தில் அனுமதி பெற்று பின்னர் அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.
கோயம்பேடு - ஆவடி மெட்ரோ திட்டம்: திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஆக. 1- சென்னை கோயம்பேட்டிலிருந்து பாடி புதுநகர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லை வாயல் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் அறிமுகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரிட்டெஸ் நிறுவனத்திற்கும் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும் இடையே புதனன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் மற்றும் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) ரிட்டெஸ் நிறுவனத்தின் சார்பாக சுதீப் குமார் குப்தா ஆகியோர் கையெழுத்திட்டனர். 15 உயர்மட்ட ரயில்நிலையங்கள் இந்த வழித்தடம் தோராயமாக 16 கிலோ மீட்டர் நீளத்திற்கு 15 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழில்துறை மற்றும் மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப் படுகிறது. முழு நீளத்திற்கும் மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. நவ. 2024-க்குள் இதுதொடர்பான பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரிவான திட்ட அறிக்கை, விரி வான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
காதலன் வீட்டில் கல்லூரி மாணவி மர்மமான முறையில் மரணம்
சென்னை, ஆக. 1- சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருப வர் மணிகண்டன் (24). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரை தேனாம் பேட்டையை சேர்ந்த ஸ்ரீஷா (20) என்ற பெண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீஷா அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரை ஸ்ரீசா உடனிருந்து கவனித்து வந்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மணிகண்டனுடன் அவரது தாய் ரேவதி மற்றும் ஸ்ரீஷா மூன்று பேரும் ராமா புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ள னர். இந்த நிலையில், புதனன்று அதிகாலை வீட்டின் அறையில் இருந்த ஸ்ரீஷா மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ரீஷா இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து, ராமாபுரம் காவல்நிலை யத்துக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராமாபுரம் காவல்நிலையத்தினர் அவரது தாய் ரேவதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீஷா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப் பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் ராமாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளேடால் நண்பரை கிழித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
சென்னை, ஆக. 1- சென்னையில் இருந்து கடலூருக்கு வழக்கு விசா ரணைக்காக அழைத்து வரப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் பிளேடால் சகநண் பரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திரு.வி.க நகரை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சரவணன் (30). சென்னை செங் குன்றத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மாணிக்கராஜ் (38). இவர் கள் இருவரையும் சென்னை கிளாம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராமதாஸ், ஒரு குற்ற வழக்கு தொடர்பாக, விசாரணை செய்தபோது மற்றொரு குற்றவாளி கடலூரில் இருப்பதாக கூறினர். இதை யடுத்து இருவரையும் ராமதாஸ் மற்றும் போலீசார் கடலூருக்கு அழைத்து வந்து, கடலூர் பாரதி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே வைத்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, சரவணன், என்னை காட்டி கொடுத்துவிட்டாயே என்று மாணிக்கராஜை பிளேடால் கிழித்து விட்டு, தன்னைத் தானே கழுத்தில் கிழித்துக் கொண்டார். பிறகு இருவரை யும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சரவணன் உள் நோயாளி யாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சரவணன் திடீரென அரசு மருத்துவ மனையில் இருந்து தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்ற னர்.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரிகள்-விசிக ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி,ஆக.1- ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரி கட்சி கள், விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக நேரு வீதியிலிருந்து ஊர்வல மாக புறப்பட்டு சட்டப்பேரவை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், சிபிஎம் மாநிலச் செய லாளர் ஆர். ராஜாங்கம், விசிக முதன்மை செயலாளர் தேவப்பொழிலன், சிபிஐ எம்எல் நிர்வாகி புருஷோத்தமன் ஆகி யோர் தலைமை தாங்கினர். மூத்த தலைவர்கள் முருகன், விஸ்வ நாதன், பெருமாள், செயற்குழு உறுப்பி னர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், பிரபு ராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா,சேது செல்வம், தினேஷ் பொன்னையா, அமுதவன், தமிழ் மாறன் உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வயநாடு நிலச்சரிவில் பலியானோருக்கு புதுவை சட்டப்பேரவையில் இரங்கல்
புதுச்சேரி, ஆக.1- புதுச்சேரி 15 வது சட்டப்பேரவையின் 5 வது கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.1) காலை 10 மணிக்கு தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன் மற்றும் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி தீர்மானத்தை பேரவைத் தலைவர் செல்வம் வாசித்தார். அதைத் தொடர்ந்த, உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். ஒரு மாதம் ஊதியம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்க ளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கேரள மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி யுள்ள புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ கே.எஸ்.பி. ரமேஷ் தனது ஒரு மாத சம்பளத்தை (ரூ. 48,500) முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.
நுண்கடன் தொல்லையால் குறிஞ்சிப்பாடியில் பெண் தற்கொலை
கடலூர், ஆக.1- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பூதம்பாடி பெ.தனபால் மனைவி வள்ளி என்பவர் தனியார் மைக்ரோ பைனான்ஸ் (எக்கியூட்டாஸ், முத்தூட் பைனான்ஸ்,) மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனுக்கான மாத தவணையை கட்ட முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடன் கொடுத்த நிறுவன ஊழியர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிபிஎம் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கிராமம் கிராமமாக சென்று அதிக கடன் கொடுத்து பெண்களை கடனாளிகளாக மாற்றியுள்ளன. குடும்ப சூழ்நிலையின் காரணமாக முறையாக தவணை தொகையை கட்ட முடியாமல் தவிக்கும் நிலையில், கடன் வாங்கிய பெண்களை தொந்தரவு கொடுத்தால், பயந்து பலர் கடன் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். தவிர்க்க முடியாமல் மாட்டிக் கொள்ளும் சிலர் மன உளைச்சலுக்கு தொடர்ந்து உள்ளாகி வருகிறார்கள். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கெடுபிடி யில் இருந்து மக்களை பாது காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வள்ளியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் அரசு நிவா ரணம் வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வேலூர் மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு
வேலூர், ஆக.1- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்தவர் சின்னு - கோவிந்தன் தம்பதிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறு பிரிவில் இருந்த அந்த குழந்தையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 2 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசி டிவி காட்சிகளை அடிப்படை யாகக் கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது. கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குழந்தையை வேலூர் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த ஜெயந்திமாலா (38) என்ற பெண் குழந் தையை கடத்தி சென்றது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது, பெங்களூரில் ஒருவருக்கு விற்பனை செய்ய முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூ ருக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறை யினர் குழந்தையை மீட்டனர்.
3 விமானங்களில் 8 கிலோ தங்கம் பிடிபட்டது
3 விமானங்களில் 8 கிலோ தங்கம் பிடிபட்டது சென்னை, ஆக 1- சென்னை சர்வதேச விமானநிலையத்தில்சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய மூன்று விமானங்களில் வந்த 9 பயணிகளிடம் இருந்து, சுமார் 8 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5.6 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மூன்று விமானங்களில் 8 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.