districts

img

தீக்கதிர் செய்தியாளருக்கு பாராட்டு

திருப்பூர், ஆக.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழ னன்று 78 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழ னன்று கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் 78 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில், வழக்கறிஞர் வை.ஆனந்தன் வர வேற்று பேசினார். தேசியக் கொடியை கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஏற்றினார். கட்சிக்கொடியை மூத்த தலை வர் எம்.ராஜகோபால் ஏற்றிவைத்தார். சுதந் திர தினம் குறித்து மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.ரங்கராஜ், கே.உண்ணிகி ருஷ்ணன், ச.நந்தகோபால், மாவட்ட செயலா ளர் ஆகியோர் பேசினர்.   இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.சாவித்திரி, வடக்கு மாநகரச்செயல ாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு ஒன்றிய செய லாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, ஆ.சிகாமணி உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட் டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் நன்றி கூறி னார். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலம்பாளையம் கிளைகள் சார்பில்  78 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட் டது. வேலம்பாளையம் ஏ.கிளைச் செயலா ளர் வி.வெள்ளிங்கிரி தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். நகரச் செயலாளர் ச.நந்த கோபால், முதல் இந்திய விடுதலைப் போர்  குறித்து பேசினார். மாலையில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி  நடத்தப்பட்டது. இதில், நகரக் குழு உறுப்பி னர் த.நாகராஜன், கிளைச் செயலாளர்கள் வி. ஆர்.சரவணகுமார், எஸ்.வசந்தி, சிஐடியு மோட்டார் சங்கத் தலைவர் விஸ்வநாதன், தையல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.வேல்முருகன், மாதர் சங்க வேலம்பா ளையம் நகரத் தலைவர் வி.அழகு, வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் அருள், கிளைச் செயலாளர் எஸ்.மதியரசு உள்ளிட்ட திரளான  மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பொது நூலகத்தில் இதேபோன்று, திருப்பூர் காலேஜ் ரோடு ஓடக்காடு பகுதியில் அமைந்துள்ள, பாரதி படிப்பகம் மற்றும் பொது நூலகத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் வடக்கு  நகர கிளையின் சார்பில் சுதந்திர தின விழா  கொண்டாடப்பட்டது. ஓடக்காடு பகுதி முன் னாள் மாமன்ற உறுப்பினர் சபோரா ரங்கசாமி  தேசிய கொடியை ஏற்றி, மாணவர்களுடன் சுதந்திர போராட்ட கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அறிவியல் வெளியீ டான நமது தலைவர்கள் புத்தகம் மற்றும் பார தியார் முகமூடி  மாணவர்களுக்கு வழங்கப் பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் கௌரிசங்கர், வடக்கு நகர கிளை செயலா ளர் திலக், உறுப்பினர்கள் சக்திவேல், நாக ராஜ் உட்பட பாரதி படிப்பகம் மாலை நேர  பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். முடிவில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அரசுப்பள்ளிக்கு உபகரணங்கள் அவிநாசி அருகே உமைஞ் செட்டிபாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, சுதந்திர தினத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள், பலர் இருக்கைகள், மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கியுள்ளனர். இதனுடைய மதிப்பு ரூ. 60  ஆயிரம் ரூபாய். இந்த நிகழ்வில் அப்பகுதி  நகர மன்ற கவுன்சிலர் தேவராஜன், முன்னாள்  வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியில் நடந்த கொடியேற்று விழா நிகழ் விலும் பங்கெடுத்தனர்.