திருப்பத்தூர். ஜூன் 11-
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப் பத்தூர் மாவட்டம், ஏலகிரி யில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் டி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், மத்திய அமைப்பு மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன்,மாநில நிர்வாகி கள் கே.ரவிச்சந்தி ரன், டி. பழனிவேலு, எம்.பீர்முக மதுஷா, ஆர்.ரவிக்குமார் மற்றும் எம்.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும்.
1.12.2019 முதல் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்திய தினமான 16.5.2023 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு பலன் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியரை அடை யாளங்கண்டு மின் வாரிய நிர்வாகமே நேரிடையாக தினக்கூலி வழங்க வேண்டும்.
கேங்மேன் பணியாளர்க ளுக்கு ஊர்மாறுதல் வழங்க வேண்டும், பகுதி நேர பணி யாளர்களை நிரந்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. பணி நிறைவு செய்த திருப்பத்தூர் கோட்டத் தலை வர் கே.விஜயகுமாருக்கு மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சால்வை அணி வித்து கவுரவித்தார்.