திருவள்ளூர், நவ 20- தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் 3 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்று அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர். அகில இந்திய தேசிய கராத்தே போட்டி நவ 16,17 ஆகிய தேதிகளில் பெங்களூர் நடைபெற்றது. இதில் இந்திய முழுவதும் 200 கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், காக்கவாக்கம் கராத்தே தலைமை பயிற்சி ஆசிரியர் சுப்பிரமணி மற்றும் தண்டலம் இலட்சிவாக்கம் கராத்தே மாஸ்டர் காக்கவாக்கம் தினேஷ் தலைமையில் மூன்று மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மூன்று பேரும் 3 தங்க பதக்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்றனர். தொளவேடு கிராமம் பி.அத்வித் கார்த்திகேயன் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். கட்டா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பேரண்டூர் கிராமம் வி.ஹரிஷ் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். கட்டா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பேரண்டூர் கிராமம் ஆர்.பத்மேஷ் 12 வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். கட்டா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.