districts

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் ரூ.494 கோடியில் 50 திட்டங்கள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப்.16- சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.494 கோடி யிலான 50 அறிவிப்புகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. பிறகு  அமைச்சர் சேகர்பாபு பதி லளித்தும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் பேசியதாவது:- சென்னைப் பெருநகரப் பகுதி யுடன் திருவள்ளூர், திருத்தணி, செங்கல்பட்டு, அரக்கோணம் ஆகிய தனித்த உள்ளூர் திட்டக் குழுமங்க ளுடன் மாமல்லபுரம், கும்மிடிப் பூண்டி, காஞ்சிபுரம் உள்ளிட்ட கூட்டு உள்ளூர் திட்டக்குழுமங்களையும், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழு மத்தையும் இணைப்பதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட் டுள்ளது.

ஜூன் 3 கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு

கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் நிலவும் போக்குவரத்து நெரி சலை சீரமைக்கும் வகையில் தாம்பரம் அருகே கிளாம்பாக்கத் தில் ரூ.88.52 ஏக்கர் நிலத்தில் ரூ.393.74 கோடியில் நவீன தொழில் நுட்ப வசதி களுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்கிற பெயருடன் ஜூன் மாதம் தொடங்கி திறக்கப்படும் என்றும் இந்த பேருந்து முனையத்தினுள் 6 ஏக்கரில் ரூ.8 கோடியில் பூங்கா அமைக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி - மீனாட்சிபுரம் சாலை ரூ.7.5 கோடியில் மேம்படுத்தப்படும்

சர்வதேச தரத்தில்  பேருந்து நிலையம்

திருமழிசை அருகில் குத்தம் பாக்கத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பேருந்துகளுக்காக 25 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.336 கோடியில் கட்டப் பட்டு வரும் புதிய பேருந்து முனை யத்தை சர்வதேச தரத்தில், கூடுதல் தளப்பரப்பு மற்றும் குளிரூட்டும் வசதி யுடன் பிரதான முனையக் கட்டடம் ரூ.60 கோடியில் கட்டிக் கொடுக்கப்படும். தண்டையார் பேட்டை பேருந்து பணிமனை ரூ.25 கோடியிலும் பெரியார் நகர் பேருந்து நிலையம் ரூ. 5 கோடியிலும் நவீன மயமாக்கப்படும்.

செங்கல்பட்டு-மாமல்லபுரம்

செங்கல்பட்டு நகரில் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், நகரின் எதிர்கால போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யவும், செங்கல்பட்டில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.90 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முன்மொழி யப்பட்டு, விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நெரிசலைக் குறைப்பதற்காகவும், நகரின் எதிர்கால போக்குவரத்துத் தேவை களைப் பூர்த்தி செய்யவும் சுமார் 6.79 ஏக்கர் பரப்பளவில் ரூ.50 கோடி யில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்நிலையம் அமைக்க முன் மொழியப்பட்டுள்ளது. இதற்கான நில உரிமை மாற்றம் செய்வதற் கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மாதவரம் சரக்குந்து முனை யத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30.30 கோடி நிதி வழங்கப்படும். சென்னை வெளி வட்டச் சாலையையொட்டி வரதராஜ ரத்தில் ஒப்பந்தப் பேருந்துகள் நிறுத்துமிடம் ரூ.29 கோடியில் அமைக்கப்படும். எண்ணூர் விரைவுச் சாலை அருகில் சாத்தாங் காடு இரும்பு மற்றும் எஃகு அங்காடி வளாகம் ரூ.33.35 கோடியில் நவீன மயமாக்கப்படும். 

சென்னையில் கொண்டித் தோப்பு பகுதியில் ரூ.10 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறு வாழ்வு மையம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப் படும். சென்னை கொளத்தூர்-பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன சந்தை ரூ.10 கோடியில்  அமைக்கப்படும். 

கடற்கரையில்  மிதிவண்டிப் பாதை

திருவொற்றியூரில் ரூ.30 கோடி யில் வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் சுமார் ரூ.5 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மேம் படுத்தப்படும். கிழக்கு கடற்கரையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை முதல்கட்டமாக சுமார் 5 கி.மீ. நீளத்துக்கு மிதிவண்டிப்பாதை மற்றும் நடைபாதை ரூ.20 கோடி யில் அமைக்கப்படும். 

கடற்கரை மறு சீரமைப்பு

சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் வரை சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.100 கோடியில் மறுசீரமைப்பு மற்றும் புத்து யிரூட்டல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இது சென்னைக் கான மூன்றாவது முழுமைத் திட்டத் தின் துணைத் திட்டமாக இருக்கும். இக்கடற்கரை பகுதி பல்வேறு மண்ட லமாக பிரிக்கப்படும்.

ஏரிக்கரை  நீர்முனை மேம்பாடு

சென்னைப் பெருநகரப் பகுதிக் குட்பட்ட ஏரிக்கரை மற்றும் நீர்முனை மேம்பாட்டுப் பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம் பாக்கம், அயனம்பாக்கம், வேளச் சேரி, ஆதம்பாக்கம், புழல்மற்றும் கொளத்தூர் ஆகிய ஏரிகள் பாது காக்கப்படும். மேலும், திறன்மிக்க உத்திகளைப் பயன்படுத்தி, பொழுதுபோக்குக்கிற்குத் தகுந்த சமூக உட்கட்டமைப்புகள் உரு வாக்கப்படும்

மே தினப் பூங்கா மேம்பாடு

சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள மே தினப்பூங்கா வில் சுற்றுச்சுவர், பார்வையாளர் மாடம், பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.5 கோடி யில் மேம்படுத்தப்படும். சென்னை கோயம்பேட்டிலுள்ள சாலை சந்தி ப்பில் ரூ.10 கோடியில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படும். சென்னை வெளிவட்டச் சாலையின் கிழக்குப் பகுதியில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின்  வசமுள்ள 50 மீட்டர் அகலமுள்ள நிலப்பரப்பில் மீஞ்சூர்,வெள்ளனூர், திருநாகேஸ்வரம் மற்றும் முடிச்சூர் ஆகிய இடங்களில் அருகில் வசிக்கும் மக்களின் நலனுக்காக4 உடற்பயிற்சிப் பூங்காக்கள் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டு, பராமரி க்கப்படும். சென்னை மாநகராட் சியுடன் இணைந்து வில்லிவாக்கம், இரட்டை ஏரி, பாடி மற்றும் வடபழனி மேம்பாலங்களுக்குக் கீழ் உள்ள இடங்கள் ரூ.6 கோடி செலவில் அழகு படுத்தப்படும். 

நடைமேடை

அண்ணா சாலை - டேம்ஸ் சாலை - ஜெனரல் பேட்டாஸ் சாலை சந்திப்பில் ரூ.15 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை கோட்டூர் மாநகராட்சி விளையாட்டுத் திடல் ரூ.5 கோடி யில் மேம்படுத்தப்படும். தியாகராய நகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ரூ.10 கோடியில் மேம்ப த்தப்படும். வியாசர்பாடி கன்னிகா புரம் விளையாட்டுத் திடம் ரூ.20 கோடி யில் நவீனமாக்கப்படும். 

துணை நகரங்களும்-மேம்பாட்டு திட்டங்களும்

திருமழிசை, மீஞ்சூர், திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம் போன்ற நகர்ப்புற வளர்ச்சி மையங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதி களையும் துணைக்கோள் நகரங்க ளாக உருவாக்க இவை ஒவ்வொன் றிற்கும் தனித்தனியாக புதுநகர் மேம்பாட்டுத் திட்டங்களை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழு மம் உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.