districts

சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற வனம்

சென்னை, நவ. 2- சென்னை மாநகரம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரு கிறது. நாள்தோறும் அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்கள் காரண மாக கிளம்பும் புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டு களுக்குள் காடுகளின் வளர்ச்சியை 33 விழுக்காடு அதிகரிப்பதற்கான நட வடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் மியாவாகி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சிறிய காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 10 முதல் 30 மடங்குவரை வேக மாக மரங்களை வளரச் செய்து சிறிய காடு களை உருவாக்க முடியும் எனக் கூறப்படு கிறது. குறிப்பாக, கோட்டூர்புரம் மற்றும் அடையாறு பகுதிகளில் 2 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடையாரில் 2,000 செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 40 வகையான செடிகள் நடப்பட்டுள்ளன. இதனால், 20 ஆயிரம் சதுர அடிக்கு அடையார் காடு உருவாக்கப்பட்டு வருகிறது.  அதேபோல், வளசரவாக்கத்தில் ஆறாயிரம் சதுர பரப்பளவில் 45 வகையான 700 செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்த வரிசையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் வனத்துறை இணைந்து சிறுசேரி சிப்காட் அருகே ராஜிவ்காந்தி சாலையோரம் 50 ஏக்கரில் புதிய பிரமாண்டமான நகர்ப்புற வனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. இந்த நகர்ப்புற வனத்தில் குளங்கள், மணல் குன்றுகள், நடைபாதை, சைக்கிள் பாதை, விளக்க மையம், பண்ணைத் தோட்டம், மருத்துவ தோட்டம், குழந்தைகள் விளையாடும் இடம், பூந்தோட்டம் உள்ளிட்டவை அமைய உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவு அதிகரிக்கும் வகையில் நகர்ப்புற வனத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நகர்ப்புற வனம் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற வனம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.