கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சோழிங்கநல்லூரில் 50 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையில் அரை கிலோ பால் பவுடர் 4 ஆயிரம் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னை சோழிங்கநல்லூரில் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் அரை லிட்டர் கொண்ட 50,000பால்பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மாநகர மக்கள் உதவிக்கு 1913 அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன் ஏற்பாடு நடவடிக்கைகள் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி 1913 என்ற உதவி எண்களை அறிவித்துள்ளது. மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ள பகுதிகளில் விரைவாக மழை நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் இணைப்புகளை கண்காணிக்க வேண்டும்.திறந்தவெளி கால்வாய்களை தூர் வாரி மூட வேண்டும்.பள்ளிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். பள்ளிகளில் சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்த சுற்றுச்சுவர்கள் சுற்றி வேலி அமைத்து தடுப்பு உருவாக்க வேண்டும்.மழை காரணமாக வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டால் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும். மின் கசிவு ஏற்படுகிறது? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர் தேக்கங்கள், திறந்தவெளி கிணறுகள், தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் இருக்கும் இடங்களில் அவை மூடப்பட்டுள்ளது? என்பதை உறுதி செய்ய வேண்டும். மழை காலங்களில் ஆறுகளில் நீர் பெருக்கும் ஏற்படலாம் என்பதால் மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்வதை தடுக்க வேண்டும் .மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் கொசு உருவாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தண்ணீரை சுட வைத்து பருக அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.