districts

img

விமானப் படை அணிவகுப்பில் 5 பேர் மயக்கம்!

தாம்பரம், அக். 8- சென்னை மெரினா கடற்கரையில், விமானப் படையின் சாகச நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாம்பரத்தில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வின்போது 3 வீரர்கள் மயங்கி விழுந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட இந்திய விமானப் படை யின் விமான சாகசத்தைக் காண வந்த 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த னர். இவர்களில் 5 பேர் அதிகப்படியான வெயில் காரணமாக வெப்ப வாதம் மற்றும் நீர்ச்சத்துக் குறைந்ததால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்திய விமானப் படையின் 92வது ஆண்டுவிழவை முன்னிட்டு தாம்பரத் தில் உள்ள விமானப் படை நிலையத் தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா வில் 100க்கும் மேற்பட்ட வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் முப்படை களின தலைமை தளபதி அனில் சவு கான், இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் மற்றும் விமானப்படையின் அதிகாரி கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் பங்கேற்று வீர நடைபோட்டு அணிவகுத்து சென்றனர்.  அப்போது, வெயிலின் தாக்கத்தின் காரணமாக 5க்கும் மேற்பட்ட விமானப் படை வீரர்கள் மயக்கமடைந்தனர். இதனை அடுத்து, அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு  அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.