districts

சென்னை முக்கிய செய்திகள்

பாடியில் மெத்தபெட்டமைன் கடத்தல்  எஸ்ஐ கணவர் உட்பட 5 பேர் கைது

சென்னை, நவ. 20- அம்பத்தூர் பாடி மேம்பாலம் அருகே இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னை மேற்கு காவல் இணை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதையடுத்து தனிப்படை கச்வல் துறையினர், பாடி மேம்பாலம் அருகே மாறுவேடத்தில் கண்காணித்தபோது சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பைக்கில், பெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து புழல் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பெயர் ஒருவர் குமரவேல் என்பதும், இவர்தான் போதை பொருட்கள் கடத்தலில் நபராக இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வண்ணாரப்பேட்டை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விசாலாட்சியின் கணவர் என்பதும்  தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக திருவேற்காடு ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சுபாஷ், புழல் பகுதியை சேர்ந்த பார்த்திபன், ஓட்டேரி பகுதியை சேர்ந்த அமீர் பாஷா, காவாங்கரை பகுதியை சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கார் மோதி வாலிபர் பலி

அம்பத்தூர், நவ. 20- தி.நகர் பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். அவரது மகன் பிரதீப்குமார் (38). இவர், பைக் டாக்ஸி ஓட்டி வந்தார். பிரதீப்குமார் மதுரவாயல் புறவழிச்சாலையில் அம்பத்தூர் நோக்கி புதன்கிழமை அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சொகுசு கார், திடீரென அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் அங்கிருந்த சாலை தடுப்பு மீது மோதி யது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த பிரதீப்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தை ஏற்படுத்தி காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோயம்பேடு காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 வில் வித்தையில்  மாணவி சாதனை

பொன்னேரி, நவ.20- 68 ஆவது தேசிய பள்ளிகள் விளையாட்டு போட்டி  குஜராத் மாநிலம் நடியாட் நகரில் நவ.10 முதல் 21வரை நடைபெற்றது. இதில் 14 வயது காம்பவுண்ட் வில் பிரிவில் பொன்னேரியை சேர்ந்த வெனிஷா ஸ்ரீ சிபிஎஸ்இ அணி சார்பில் பங்கு பெற்றார். இந்த போட்டியில் இவர் 720/684 புள்ளிகள் பெற்று 2 தங்கம், ஒரு வெண்கலம் வென்றார். வில் வித்தை வரலாற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இவர் பொன்னேரியில் உள்ள தயன் சந்து ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இசக்கியல் மற்றும் லவ்லி சுந்தரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியர் பலி

சென்னை, நவ. 20- சென்னை சாலிகிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியர் உயிரிழந்தார். நேபாளத்தைச் சேர்ந்தவர்  ஆகாஷ் (18). இவர் சென்னை சாலிகிராமம் அருணாச்ச லம் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.   இதற்காக அவர் அங்கேயே தங்கி யிருந்தார். ஆகாஷ், செவ்வாய்க்கிழமை இரவு உணவகத்தின் வேலை நேரம் முடி வடைந்ததும்,  அங்கு தண்ணீரை ஊற்றி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது  தரையில் இருந்த ஒரு மின் இணைப்பு பெட்டியின் மீது தண்ணீர் பட்டது.  இதனால்  மின் கசிவு ஏற்பட்டு ஆகாஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆகாஷை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டியில் தீபாவளி  சீட்டு பணம்  கட்டியவர்களிடம்  பல லட்சம் மோசடி

கடலூர், நவ.20- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள விசூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், லட்சுமிபதி நகரை சேர்ந்த அர்ஜுனன் ஆகிய இருவரும்  முத்தாண்டிகுப்பம், முத்தரசன்குப்பம், புதுப்பேட்டை, சேமக்கோட்டை, விசூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த முந்திரிக்கொட்டை உடைக்கும் பெண் தொழிலாளர்களை குறிவைத்து தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் நகை மற்றும் பொருட்கள் வழங்குவதாக கூறி மாதம் ரூ2ஆயிரம் என பெண்களிடமிருந்து பல லட்சம் பணம் பெற்றுள்ளனர். இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் 400 க்கு மேற்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். ஆனால் தீபாவளிக்கு வழங்க வேண்டிய நகை மற்றும் பொருட்களை வழங்காமல் பெண்களை அலைக்கழித்து வந்த நிலையில், சீட்டு பிடித்த கண்ணன் என்பவர் விஷம் அருந்தி கடந்த மாதம் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் பண்ருட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். அப்போது முந்திரி கொட்டை உடைத்து கஷ்டப்பட்டு கட்டிய பணத்தை பெற்றுத் தரும்படி காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் பெண்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஏஜென்ட் அர்ஜுனன் என்பவரிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை, நவ. 20 – ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளியன்று (நவ. 22) காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இந்த முகாமில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரம் வழக்கு நவ 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சிதம்பரம், நவ.20-  சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத் தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது.   இது இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.  இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தக் கூடாது என்றும் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கடந்த 300 ஆண்டு களுக்கு மேலாக நடராஜர் கோவில் தீட்சி தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால்பெரியளவில் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் எந்த ஒரு விழாவும் நடத்தப்படாமல்உள்ளது.    கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்த நிலை யில் கோவில் அறங்காவலர்கள் கோவிந்த ராஜ பெருமாள் கோவில் வாசலில் உள்ள கொடிமரம் பழுதடைந்துள்ளது.  அதனை மாற்றி அமைக்க வேண்டும் என இந்து அறநிலையத் துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 4ம் தேதி இந்த அறநிலைத்துறையினர் கொடி மரத்தை மாற்றுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.  இதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு சிதம்பரம் சார்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது.  அப்போது கொடி மரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என 15 நாட்களுக்கு நீதிமன்றம் தடை விதித் தது.  இதனைதொடர்ந்து புதனன்று சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயனிடம்  விசாரணைக்கு வந்தது. இதில்  தில்லை கோவிந்தராஜ பெருமாள் தரப்பு வழக்கறி ஞர்கள் மற்றும் நடராஜர் கோவில் தரப்பு  வழக்கறிஞர்கள் என இரு தரப்பு வாதங்க ளையும் கேட்டறிந்த நீதிபதி வரும் 26 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.