சென்னை, ஜூலை 28 -
45 சென்னை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஆகஸ்ட் மாதத்தில் நிரப்பப் படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறினார்.
மாநகராட்சி மாதாந் திர கூட்டம் வெள்ளியன்று (ஜூலை 28) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது 123வது வார்டு உறுப்பினர் எம்.சரஸ்வதி பேசுகையில், புனித மேரி சாலையில் உள்ள சென்னை பள்ளி யில் மழைநீர் தேங்குகிறது. அதை சரி செய்ய நடவ டிக்கை எடுக்கப்படுமா?
மேலும், பள்ளியில் ஒரு பெரிய மரம் உள்ளது. அதன் காரணமாக சுற்றுச் சுவர், தரை ஆகியவற்றில் விரிசல் ஏற்படுகிறது. மரத்தை அகற்ற அனுமதி வழங்கப் படுமா? சென்மேரிஸ் பள்ளி, பீமன கார்டன் பள்ளி, வன்னியபுரம் பள்ளி ஆகிய 3 பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, புனித மேரி சாலை சென்னை நடுநிலைப் பள்ளியின் இரண்டாவது தளத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைத்தல், பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சீரமைத் தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள 9.60 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப் பட்டுள்ளது.
மேலும், இந்தப் பள்ளியை ஒட்டியுள்ள புதிய கட்டிடத்தின் 2வது தளத்தில் 9.50 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் ஒரு வகுப்பறை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியாணை ஒப்பந்ததாரருக்கு வழங்கப் பட்டுள்ளது. விரைவில் பணி கள் தொடங்கும் என்றார்.
ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் குறிப்பிடுகை யில், 5 மேல்நிலைப் பள்ளி, 8 உயர்நிலைப் பள்ளி, 32 நடுநிலை, தொடக்கப் பள்ளி களில் தலைமை ஆசிரியர் கள் இல்லை. இந்த பணி யிடங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படும் என்றார்.