இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 44வது அமைப்பு தினம் ஞாயிறன்று (நவ.3) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மத்திய சென்னை மாவட்டத்தில் பல்வேறு கிளைகளில் கொடியேற்றப்பட்டது. எழும்பூர் பகுதியில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மாவட்டப் பொருளாளர் ஜெ.பார்த்திபன், மாநிலக்குழு உறுப்பினர் நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், துணைச் செயலாளர் ஆ.பிரியதர்ஷினி, துணைத் தலைவர் யூஜின் உள்ளிட்டோரும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று பேசினர்.