districts

img

கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, மார்ச் 2- கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஞாயிறன்று (மார்ச் 3) காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே 44 புறநகர் ரயில்கள் ஞாயிறன்று (மார்ச் 3) ரத்து செய்யப்படுகிறது. சென்னையின் முக்கிய பொது போக்குவரத்தாக புறநகர் மின்சார ரயில் சேவை விளங்கி வருகிறது. தினசரி  பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் என பல தரப்பின ரும் மின்சார ரயில் சேவையை ஆயிரக்கணக் கானோர் பயன்படுத்துகின்றனர். பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது சென்னை மின்சார ரயில் சேவை குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவ துமாக ரத்து செய்யப்படுவதும், நேரம் மாற்றியமைக்கப்படுவதும் வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளுக்கு அறிவிக் கப்படும். மேலும் மக்களின் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே ஞாயிறன்று பராமரிப்புப் பணிகள் நடை பெற உள்ளதால் 44 புறநகர் ரயில் சேவை  ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிறன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து  காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி  வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி  வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல், செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை  கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.