districts

img

சிதம்பரம் அருகில் பிடிபட்ட 400 கிலோ எடை கொண்ட முதலை!

சிதம்பரம், ஆக.10- சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தை யொட்டி ஓடும் பழைய கொள்ளிடம் ஆற்றில் கிராம மக்கள் குளிக்கும் இடத்தில் முதலை கள் தாக்காமல் இருக்கும் வகையில் வனத்துறை சார்பில் இரும்பு கூண்டு அமைக்கப்ப்பட்டுள்ளது. இந்த இரும்பு கூண்டில் சனிக்கிழமையன்று(ஆக. 10) பெரிய முதலை ஒன்று புகுந்துள்ளதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து, சிதம்பரம் வன பிரிவு அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வனக் காப்பாளர் அன்புமணி, புவனகிரி ஞானசேகர், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். அங்கு மக்கள் உதவியுடன், 12 அடி நீளம் சுமார் 400 கிலோ எடை கொண்ட அந்த முதலையை லாவகமாக வலை வீசி பிடித்தனர்.பின்னர், சரக்கு வாகனம் மூலம் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.