கிருஷ்ணகிரி, மே 11-
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கட்டிக்கான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது25). இவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேபோல் மாடச்சந்திரம் அருகே உள்ள குரள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (55). இவர் கிருஷ்ண கிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டி ருக்கும் போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து குருபரப்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் கிருஷ்ணகிரி அட்கோ பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தொடுதே பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த வாகனம் மோதியதில் ரமேஷ் படுகாய மடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அட்கோ காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மத்தூர் ஜே.ஆர். நகரை சேர்ந்தவர் சேட்டு (50). இவர் புதன்கிழமை இரவு திருவண்ணாமலை - பெங்க ளூரு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மே?தியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மத்தூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.