தொழிற்சங்க தலைவர் தோழர் ஏ.ஜி.காசிநாதனின் 3ஆம் ஆண்டு நினைவு தினமான செவ்வாயன்று (பிப்.13) கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துறைமுகம் பகுதி செயலாளர் ஜலாலுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, மூத்த தலைவர் எம்.வி.கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, வெ.தனலஷ்மி, எஸ்.கே.முருகேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார், இன்சூரன்ஸ் அரங்க தலைவர் ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.