வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை
அம்பத்தூர், அக். 27- ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதி டிபன்ஸ் காலனியில் வசிப்ப வர் முரளிதரன். இவர் மத்திய அரசு ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகப் பட்டினம் வேளாங்கண்ணி சென்றுள்ளார். இந்நிலையில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் முரளிதரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து, அவருக்கு தகவல் அளித்தனர். அவர் நாகப்பட்டினத்தில் இருந்து திரும்பி வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 35 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து முரளிதரன் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஓசூரில் போலி மருத்துவர் கைது
கிருஷ்ணகிரி,அக்.27- ஓசூர் அடுத்த திம்ம சந்திரம் கிராமத்தில் உள்ளது தாமரை பாலி கிளினிக். அதை நடத்தும் நபர் மருத்துவம் படிக்காமல் மருத்துவர் என்று மக்களுக்கு சிகிச்சை அளித்து வரு வதாக கிடைத்த தகவ லின் பெயரில் ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஞான மீனாட்சி, மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலியாக சிகிச்சை அளித்து வந்ததை கண்டுபிடித்தனர். பிறகு, அட்கோ காவல் துறை யினருக்கு தகவல் கொடுத்த னர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் போலி மருத்துவர் பிரபாவை கைது செய்தனர்.
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம பெண்கள் மறியல்
கிருஷ்ணகிரி,அக்.28- ஊத்தங்கரை வட்டம், மத்தூர் அருகே உள்ள குட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் சேக்கினாம்பட்டி கிராமம். இங்கு 200 குடும்பம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சிமன்ற நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தரவில்லை. இதனால், நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் மத்தூர் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த ஊராட்சி மன்ற நிர்வாகி, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம முழுமைக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து கலைந்து சென்றனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் வெளியிட்டார்
கள்ளக்குறிச்சி, அக். 27- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமார் வெளியிட்டார். தற்போதைய நிலவரப்படி உளுந்தூர் பேட்டை தொகுதியில் 337 வாக்குச் சாவடி களில் 1,45,128 ஆண் வாக்காளர்களும். 1,41,241 பெண் வாக்காளர்களும் 53 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,86,422 வாக்காளர்கள் உள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதியில் 305 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 1,33,608 ஆண் வாக்காளர்கள் 1,30, 910 பெண் வாக்காளர்கள், 54 இதர வாக்காளர்கள் உள்ளனர். ஆக மொத்தம் 2,64,572 வாக்காளர்கள் உள்ளனர். சங்கராபுரத்தில் 300 வாக்குச்சாவடிகளில் 1,30,928 ஆண் வாக்காளர்களும் 1,31, 919 பெண் வாக்காளர்களும் 49 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,62,896 வாக்காளர்கள் உள்ளனர். கள்ளக்குறிச்சி(தனி) சட்டமன்ற தொகுதி யில் 332 வாக்குச்சாவடிகளில் 1,37,274 ஆண் வாக்காளர்களும் 1,38, 785 பெண் வாக்காளர்களும் 72 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,76,131 வாக்காளர்கள் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 1, 274 வாக்குச்சாவடி மையங்களில் 5,46,938 ஆண் வாக்காளர்கள் 5,42,855 பெண் வாக்காளர்கள் மற்றும் 228 இதர வாக்காளர்கள் என மொத்தம் 10,90,021 வாக்காளர்கள் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நியமன வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய அலுவலகங்களில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 4.11.2023, 5.11.2023, 18.11.2023, 19.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெறும். இச்சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், பெயர் நீக்கல், பெயர் சேர்த்தல் பணி நடைபெறும்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத தலித் பெண்கள்
கிருஷ்ணகிரி,அக்.27- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள மிடுகரப்பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட தலித் குடும்பம் குடிசை வீடுகளில் வசித்து வரு கின்றனர். 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வர்கள் கூலி வேலைகளையும் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்குள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தும் இது வரை கிடைக்கவில்லை. இதற்கு காரணம், இதுகுறித்து ஆய்வு செய்தபோது வருமான வரி கட்டி வருவதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தாக கூறப்பட்டுள்ளது. இது தவறான தகவல் என்று தெரி வித்து இருமுறை விண்ணப்பித்தும் திரும்பத் திரும்ப அதே தகவல் கூறப்பட்டு வருகிறது. இதனால் வேதனை அடைந்த தலித் பெண்கள் ஜெயந்தி,சிவம்மா,அனிதா ஆகியோர் தலைமையில் ஓசூர் சாராட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் கூலி வேலை செய்து வறுமைக் கோட்டுக்கு கீழ் நிலையில் வாழ்ந்து வரும் எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.