மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 16 தேதிகளில் மகளிர் நல மேம்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நினைவுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.கிரிஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.