ஆவடி, டிச. 3- ஆவடியில் 15 வளர்ச்சி திட்டப் பணிக ளுக்கு அமைச்சர் சா.மு.நாசர் செவ்வா யன்று (டிச. 3) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி பகுதிகளான காமராஜர் நகர், சத்தியமூர்த்தி நகர், திரு முல்லைவாயில் காலனி, எட்டியம்மன் நகர், சோழம்பேடு, பட்டாபிராம்- நேரு நகர் ஆகிய இடங்களில் உள்ள மாநக ராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருமுல்லைவாயில் முல்லை நகர், சோழன் நகர், சோழம்பேடு, செந்தில் நகர், நாகம்மை நகர், கவரப்பாளையம் ஆகிய பகுதிகளில் நியாய விலைக் கடை கட்டிடம் கட்டுதல் மற்றும் அண்ணனூர், ஸ்ரீ சக்தி நகரில் உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல் ஆகிய 15 வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.3.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் மேயர் கு.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் எஸ்.கந்தசாமி, பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன், மண்டல குழுத்தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், அமுதா சேகர், என்.ஜோதிலட்சுமி, வி.அம்மு, திமுக நிர்வாகிகள் சண்.பிரகாஷ், பேபி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.