districts

விவசாயிக்கு கொலை மிரட்டல் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

செஞ்சி, ஜூன் 17-

     செஞ்சி அருகே விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 3 வருடம் சிறை தண்டனை விதித்து செஞ்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

   விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஊரணித்தாங்கலை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சுந்தர வடிவேல் விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர்கள் சின்ன குழந்தை மகன் அருணகிரி (43). சாமிக்கண்ணு மகன் பாலச்சந்திரன் (53). இவர்கள் சுந்தரவடிவேலுவின் அண்ணன் அருணகிரியிடம் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பிதராதது குறித்து பிரச்சனை இருந்து வந்தது.  

   கடந்த 2013 ஆம் ஆண்டில் அருணகிரியும், பாலச்சந்திர னும் சுந்தரவடிவேலை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சுந்தர வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு செஞ்சி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்கறி ஞராக சக்திவேல் ஆஜரானார். இந்த வழக்கில் விசா ரணை முடிந்ததையடுத்து, செஞ்சி குற்றவியல் நடுவர் மனோ கரன் அளித்த தீர்ப்பில், அருணகிரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராத மும், பாலச்சந்திரனுக்கு 2 பிரிவுகளில் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.