கடலூர், பிப்.16- நெய்வேலியில் விவசாய பணிக்கு சென்ற பெண்களை துரத்தி கதண்டுவண்டு கொட்டியதில் காயமடைந்த மூன்று பெண்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள நண்டு குழி கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் நெய்வேலி பகுதியில் உள்ள மத்திய எண்ணை சுத்திகரிப்பு பண்ணையில் உள்ள மணிலா வயலுக்கு களை எடுக்க சென்றுள்ளனர். அப்போது விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை கதண்டுகள் துரத்தி கொட்டியதில் சுதா, பழனியம்மாள், சூரிய கலா ஆகியோர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.