districts

img

பாரிமுனையில் பழைய விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம்

சென்னை, நவ. 11- சென்னை பிராட்வே பேருந்து நிலை யம் எதிரே உள்ள செயல்படாத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி இடிந்து விழுந்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. சென்னை பாரிமுனையில் பிராட்வே பேருந்து நிலையம் எதிரே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி முதுகலை மாண வர்கள் விடுதி கட்டிடம் 60 ஆண்டுகள் பழமையானது. இந்த விடுதியை கடந்த 1959ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி காமராஜர் திறந்து வைத்தார். மொத்தம் 342 அறைகள் கொண்ட இந்த விடுதியில் 430 பேர் தங்கும் வகையில் இடவசதி உள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் 4.24 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நீதித்துறைக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்ட உத்தரவிடப்பட்டது. அதன் பின்னர் அங்கி ருந்து மாணவர்கள் அனைவரும் அங்கி ருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, செயல்படாத கட்டிடமாக இருந்த வந்தது. இந்நிலையில் திடீரென அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அந்த வழியாக நடந்து சென்ற தி.நகரைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சொக்கலிங்கம் என்பவருக்கு இடது காலிலும், விஸ்வநாதன் என்பவருக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த 3 பேருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு இடிபாடுகளை உடனடியாக இடித்து அகற்ற அறிவுறுத்தினார்.