districts

img

ஆடு திருட்டு: அதிமுக பிரமுகர் கொலையில் 3 பேர் கைது

கடலூர், ஜுலை 1- கடலூர் வண்டிப்பாளையம் ஆலைக் காலனி பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன் (வயது 46), அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் கடலூர் நகராட்சி கவுன்சிலர் ஆகவும் இருந்துள்ளார்.   தற்பொழுது அதிமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். இது குறித்து போலீசார்  விசாரணை செய்ததில், கடந்த ஓராண்டுக்கு  முன்பு இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆடுகளை திருடி வந்து  தொடர்ந்து புஷ்பநாதனிடம் விற்பனை செய்து வந்தனர்.   அந்த நேரத்தில் ஆடு திருடும் பொழுது இவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொள்ள, இவர்கள் ஆடு திருட பயன்படுத்தப்பட்ட கார்  மற்றும் இவர்களுடைய வாகனங்கள் உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் சிறையில் அடைக் கப்பட்டனர். இவர்களை ஜாமினில் எடுக்கவோ அந்த வாகனத்தை போலீஸாரிடம் இருந்து மீட்டு தரவோ புஷ்பநாதன் எந்த உதவியும் செய்யாத காரணத்தினால் கடந்த சில  மாதங்களாகவே இவர்களுக்கும் புஷ்ப நாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுவே முன் விரோதமாக இருந்த நிலை யில் அதே பகுதியைச் சேர்ந்த நேதாஜி (22), அஜய் (23 ), சந்தோஷ் (24) ஆகிய  மூன்று பேர் இணைந்து இந்த கொலையை  செய்தது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் கடலூர் முதுநகர்  போலீசார் கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தங்கள் பகுதியை சேர்ந்தவரே புஷ்பநாதனை கொலை செய்தது அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அந்தப் பகுதியில் உள்ள நேதாஜி மற்றும் அஜயின் வீடுகளுக்குள் புகுந்து வீட்டை சூறையாடினர். இதனை அடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.