districts

கோவில்களில் திருடிய 3 பேர் கைது

விழுப்புரம், மார்ச் 3- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் அருகே சின்ன வளவனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி வெள்ளை அக்கம்பக்கத்தினரை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றார். பொதுமக்கள் வருவதைக் கண்டதும் அந்த மர்மநபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்று 3 பேரை மட்டும் மடக்கி பிடித்த னர். பின்னர் 3 பேரையும் மயிலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை யடுத்து பிடிபட்டவர்களிடம் காவல் துறை யினர் விசாரணை நடத்தினர். இதில் அவர்  கள் விழுப்புரம் அருகே  சித்தலிங்கமடம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராமச் சந்திரன் (40), அவரது தம்பி பாண்டியன் (29) மற்றும் குமார் (35) என்பது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் ஏழுமலை மகன் கார்த்தி, அம்மாசி மகன்கள் சங்கர், விஜி, செல்வம் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 7 பேரும் திண்டிவனம், மயிலம், வெள்ளிமேடு பேட்டை பகுதியில் உள்ள 10 கோவில்களில் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து ராமச்சந்திரன், பாண்டியன், குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

;