districts

img

கோழிப்பண்ணையில் தீ 3,000 கோழிகள் கருகின

காஞ்சிபுரம், ஆக. 10-

    காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணை யில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கோழிகள் தீயில் கருகி இறந்தன.

    காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முசரவாக்கம் முத்துவேடு சாலை கன்னியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது கோழி பண்ணையில் 3 ஆயிரம் பிராய்லர் கோழிக் குஞ்சுகளை வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் வியாழனன்று அதிகாலை திடீரென கோழிப்பண்ணையின் கூரையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ முழுவதும் வேகமாக பரவி கோழி பண்ணையில் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகளும் தீயில் கருகி செத்தன. இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் மொத்தம் ரூ15 லட்சம் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.