சென்னை,ஜன.22- மாநில அளவில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்க ளுக்கான இரண்டாவது சதுரங்க சாம்பியன் போட்டி சென்னையில் ஞாயிறன்று நடைபெற்றது. பெரும்பாக்கத்தில் உள்ள காசாகிராண்டு சர்வதேச பள்ளியில், இந்தப் போட்டி நடைபெற்றது. மவுண்ட் செஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட இளம் சதுரங்க திறமையாளர்கள் கலந்துகொண்ட னர். இந்தியாவின் 80வது கிராண்ட் மாஸ்டர் விக்னேஷ் என்.ஆர், மவுண்ட் செஸ் அகாடமியின் நிறுவனர் த ரவிச்சந்திரன் மற்றும் காசாகிராண்டு இண்டர்நேஷனல் பள்ளியின் தலைமைச் செயல் அலுவலர் துவாரகேஷ் பி ஆகியோர் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டனர். போட்டியின் தொடக்கத்தில், மாணவர்கள் 8 வயதிற்கு கீழ், 10 வயதிற்கு கீழ், 12 வயதிற்கு கீழ், 16 வயதிற்கு கீழ் என 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஆறு சுற்றுகள் விளையாடினர். கடுமையான போட்டிக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 15 சாம்பியன்கள் தேர்வு செய்யப்பட்டு, கோப்பைகளுடன் கவுரவிக்கப்பட்ட னர். ஒவ்வொரு பிரிவிலும் கீழும் முதல் இடத்தைப் பெற்ற பங்கேற்பாளர்களுக்கு டிஜிடி 2010 செஸ் கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.